http://www.gowthampathippagam.com


முகப்பு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | நூல்/குறுந்தகடு வாங்க | நூல் வெளியிட | இலவசமாக நூல் வெளியிட

கௌதம் பதிப்பகம்

இலவச நூல் வெளியீடு - வழிமுறைகள்

அன்புடையீர்!

     உங்கள் தமிழ் படைப்புகளை நாங்கள் முற்றிலும் இலவசமாக வெளியிட்டு உதவ தயாராயிருக்கிறோம். இதன்மூலம் எழுத்தாளரான உங்களுக்கு புத்தகம் வெளியிடுவதில் உள்ள பல்வேறு சிக்கல்களை நாங்கள் ஏற்றுக் கொண்டு உங்களுக்கு உதவ உள்ளோம்.

     தங்களின் கையெழுத்துப் பிரதியை நாங்கள் கணினியில் கம்போஸ் செய்து ஆப்செட் முறையில் அச்சிடுகிறோம். 96 முதல் 128 பக்கங்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

     அச்சிடப்படும் 1200 பிரதிகளுள் 900 பிரதிகளை நாங்கள் எடுத்துக்கொண்டு, 300 பிரதிகளை தங்களுக்குத் தருகிறோம். நாங்கள் எடுத்துக் கொள்ளும் 900 பிரதிகளின் விற்பனைத் தொகை எங்களுடைய உழைப்புக்கும், விளம்பரத்திற்கும் ஈடுசெய்கிறது. இது தவிர வேறு எந்த ராயல்டி தொகையோ அல்லது அதிகப்படி பிரதிகளோ தங்களுக்கு அளிக்க இயலாது. புத்தக உரிமை முழுவதும் எங்களுடைய பதிப்பகத்துக்குத் தான் என்பதை உறுதிசெய்ய நூலின் 2ஆம் பக்கத்தில் இது பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும்.

     தாங்கள் அனுப்பும் படைப்பு எதுவாக இருந்தாலும் படித்துப் பார்த்து பரிசீலனை செய்த பிறகே பதிப்பிக்க முடியும். நீங்கள் தெளிவான கையெழுத்துப் பிரதி, அல்லது தட்டச்சு செய்த பிரதியின் நகலை மட்டும் அனுப்பவும். இது தங்களுக்கு திருப்பி அனுப்பப் படாது. ஆகவே மூலப் பிரதியை அனுப்ப வேண்டாம். தங்களிடமே வைத்துக் கொள்ளவும்.

      கம்போஸிங் முடிந்ததும் புரூப் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதில் பிழைகள் இருந்தால் திருத்தி, தேவைப்படும் ஒரு சில மாற்றங்களை மட்டும் செய்து எங்களுக்கு அனுப்பவும். அதிக மாற்றங்களை தவிர்க்கவும்.

     தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தங்களைப் பற்றிய ஆசிரியர் குறிப்பு, ஆசிரியர் உரை அல்லது மற்றவர்களிடமிருந்து பெற்ற அணிந்துரை, வாழ்த்துரை ஆகியவற்றையும் அனுப்பவும். இவை அனைத்தையும் ஒரே தடவையில் அனுப்பவும்.

     நூலின் தலைப்பு வாசகர்களைக் கவரும் விதத்தில் இருத்தல் அவசியம் என்பதால் இதில் கூடுதல் கவனம் செலுத்தி குறைந்தது 3 தலைப்புக்களையாவது அனுப்பவும். நூலின் தலைப்பை மாற்றவும் பதிப்பகத்துக்கு உரிமை உண்டு.

     தங்களுடைய படைப்பு எங்கள் பதிப்பகத்தால் பதிப்பிக்க ஏற்றுக்கொள்ளப் பட்டால், உங்களுக்கு கடிதம் / தொலைபேசி / மின்னஞ்சல் மூலம் உடனடியாக தெரியப்படுத்தப்படும். பின்னர் ஏறக்குறைய ஒரு மாதத்தில் நூல் அச்சிட்டு வெளியிடப்படும். உங்களுக்கும் 300 பிரதிகள் இலவசமாக அனுப்பி வைக்கப்படும். (வெளிநாட்டு அன்பர்கள் அஞ்சல் செலவு அளிக்க வேண்டும்.)

     நூல் வெளியீட்டு விழா நடத்துவது பதிப்பகத்தின் வசதியைப் பொறுத்தது.

     தங்களுக்கு அளிக்கப்படும் 300 நூல் பிரதிகளில் நீங்கள் விருப்பப்பட்டால் நீங்கள் விரும்பும் எண்ணிக்கையிலான நூல் பிரதிகளை நாங்கள் உங்களுக்காக விற்று தரவும் உதவுகிறோம். அவ்வாறு விற்கப்படும் நூலின் விலையில் 60% உங்களுக்கு அளிக்கிறோம்.

     புத்தகம் முழுவதும் விற்றுத் தீர்ந்து மறுபதிப்பு செய்யும் போதும், அச்சிடப்படும் 1200 பிரதிகளில் நாங்கள் 800 பிரதிகளை எங்கள் செலவீனங்களுக்காக எடுத்துக் கொண்டு உங்களுக்கு மீதியுள்ள 400 பிரதிகளை அளிக்கிறோம். அப்போதும் நீங்கள் விரும்பும் நூல் பிரதிகளை உங்களுக்காக விற்று அவற்றின் விலையில் 60% உங்களுக்கு அளிக்கிறோம்.

     உங்களுக்கு நூல் வெளியிடு குறித்து மேலே சொல்லபட்ட அனைத்து நிபந்தனைகளும் உடன்பாடாக இருந்து, உங்கள் நூலை எங்கள் பதிப்பகம் மூலம் வெளியிட விரும்பினால், நூலின் கையெழுத்துப் பிரதி, உங்கள் புகைப்படம், மற்றும் பிற விவரங்களுடன், உங்கள் நூலை எங்கள் பதிப்பகம் மூலம் வெளியிடுவதற்கு முழு உரிமையும் அளிப்பதற்கான உங்களின் ஒப்புதல் உறுதிமொழி கடிதத்தையும் இணைத்து எங்களுக்கு அனுப்பவும்.

மேலும் விபரங்களுக்கு

கோ.சந்திரசேகரன்,
கௌதம் பதிப்பகம்,
எண். 2, சத்யவதி நகர் முதல் தெரு,
பாடி, சென்னை - 600 050.
தொலைபேசி: +91-94440-86888, +91-98947-62888, +91-90422-76544
மின்னஞ்சல்: admin@gowthampathippagam.com

அன்புடன்
கோ.சந்திரசேகரன்




எமது நூல்கள்
எமது குறுந்தகடுகள்
 
எமது வலைதளங்கள்
சென்னைநூலகம் சமையல்அறை தமிழ்திரைஉலகம் இன்பசுற்றுலா சிறுவர்உலகம் வாவ்கிரிக்கெட் இந்தியாஇன்போலைப்ரரி சென்னைநெட்வொர்க் கோவைநெட்வொர்க் மதுரைநெட்வொர்க் திருச்சிநெட்வொர்க் நெல்லைநெட்வொர்க் சேலம்நெட்வொர்க்